Clean SriLanka வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் 300 மில்லியன் யென்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
கழிவுகளை போக்குவரத்து செய்வதற்காக பயன்படுத்தப்படும் 28 புதிய கொம்பெக்டர் வாகனங்கள் இந்த திட்டத்தின் கீழ் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த வாகனங்கள், மேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், உள்ளூராட்சி மன்றங்களின் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பின் திறனை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளன.
இதற்கான பரிமாற்றல் ஆவணங்களில் கையெழுத்திடும் நிகழ்வு நிதியமைச்சில் அண்மையில் நடைபெற்றது.
Post a Comment